இன்று செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு செய்தி ஒளிபரப்பப்பட்டது.
தெலங்கானாவில் தீவிரவாதிளுக்கும் காவல் துறையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல் துறையினரும், இரு தீவிரவாதிகளும் உயிர் இழந்தனர் என்று சொன்னார்களே தவிர, நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த அந்த காவல் அதிகாரி பெயரைக் கூட குறிப்பிடவில்லை. எனக்கு சற்று வருத்தமாகவே இருந்தாலும், அந்த அதிகாரி பெயரைக் கண்டுபிடிக்க வேண்டுமென இணையத்தில் அந்தச் செய்தியைக் குறிப்பிட்டுத் தேடினேன். முதலில் வந்தது Deccan chronicle-ன் செய்தி. அட அதிலும் அவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அடுத்ததாக The Indian express-ல் அவரின் பெயரைக் கண்டுபிடித்தேன். அவர் பெயர் நாகராஜு என்றும் அவருக்குத் திருமணமாகி 5 மாதங்கள் தான் ஆகின்றது எனத் தெரிந்தது.
இப்படி நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த ஒருவரின் பெயரைக் கூட குறிப்பிடாமல் இருக்கும் நிலையில்தான் நம் நாடு இருக்கிறது. எப்பதான் திருந்த போறாங்களோ??
Updating lives..
Sunday, April 12, 2015
எப்பதான் திருந்த போறாங்களோ??
Subscribe to:
Posts (Atom)